பள்ளிகளில் பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கும் பணி தொடக்கம்

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் இன்று காலை 9 மணியளவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்குகிறது….தமிழகத்தில் கடந்த 9–ந் தேதி பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.அதன்படி இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்குகிறது. இதற்காக அந்தந்த பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்ட கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கு முன்பு அனைத்து சான்றிதழ்களையும் மிக கவனமாக சரி பார்க்கவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

262 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.