வேலூர் மின்பகிர்மான வட்டம், ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த துணை மின்நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
இதனால் அன்று ஆற்காடு நகர், ஹவுசிங் போர்டு, வேப்பூர், விஷாரம், நந்திபாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், தாஜ்புரா, லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி தக்கான்குளம், களர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என ஆற்காடு செயற்பொறியாளார் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
545 total views, 2 views today
