VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

TNPSC VAO Exam 2015 Latest NewsTNPSC நடத்தும் VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள என அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அதிகாரி (VAO) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

 

இந்தத் தேர்வை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இது குறித்து குறிப்பிட வேண்டும்.

 

விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

361 total views, 2 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.