தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆய்வு செய்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் நேற்று அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குசாவடி மையங்களில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆய்வு செய்தார்.
381 total views, no views today
