குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி தலைமை தாங்கினார்.
நகரமன்ற தலைவர் எஸ்.அமுதா, முன்னாள் தலைவர் பாஸ்கர், நிர்வாகிகள் தனஞ்செயன், கே.கேசவன், ஆர்.மூர்த்தி, சுந்தரேசன், அன்வர்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்து பேசினார்.
இதில் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் ஆர்.கோவிந்தசாமி, நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கவுரி, வெங்கடம்மாள், தேவகுமார், கம்பன், கார்த்திகேயன், அம்மன் சுரேஷ், இ.டி.பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
490 total views, 3 views today
