மேல்விஷாரம் நகர பகுதிகளில், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரி தனது ஆதரவாளர்களுடன் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர் முகம்மத்ஜான் எம்.எல்.ஏ., மேல்விஷாரம் நகரசபை தலைவர் அப்துல்ரகுமான், துணை தலைவர் இப்ராகிம் கலிலுல்லா, நகர அ.தி.மு.க. அவைத்தலைவர் அப்துல் மன்னான் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், அ.தி.மு.க.வின் பிற அணி நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
405 total views, 1 views today
