திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை திருப்பத்தூரில் உள்ள 36 வார்டுகளிலும் திறந்த வெளி ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பில் மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி, நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், நகரசபை தலைவர் எஸ்.அரசு, தி.மு.க.தேர்தல் பொறுப்பாளர் கதிரவன், துணை செயலாளர் எஸ்.அன்பு, கோ.செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் கே.பி.ஆர்.ஜோதிராஜன், சண்முகம், நகரசபை உறுப்பினர்கள் சபியுல்லா, சவுத்அகமத், கலிபுல்லா, இளைஞரணி அமைப்பாளர் மாது, சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
243 total views, 3 views today
