மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் விடுத்த அறிக்கையில் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு, ரூ.24,000 கோடி மதிப்பில் கடல் பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்படும்.இந்த திட்டம் குறித்து, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்த போது, அவருடன், பிரதமர் நரேந்திர மோடி விரிவாக விவாதித்தார்.
இதற்கான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிதியை அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி தயாராக உள்ளது.
306 total views, 1 views today
